தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

சர்வதேச கராத்தே போட்டியில் பதக்கங்கள்: கொடைக்கானலில் மாணவர்களுக்கு வரவேற்பு

கராத்தே போட்டியில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்கள் பெற்று, கொடைக்கானல் திரும்பிய மாணவர்களுக்கு திங்கள்கிழமை பொதுமக்கள் வரவேற்பளித்தனர்.

Updated On :13 பிப்ரவரி 2019, 8:13 am IST

கராத்தே போட்டியில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்கள் பெற்று, கொடைக்கானல் திரும்பிய மாணவர்களுக்கு திங்கள்கிழமை பொதுமக்கள் வரவேற்பளித்தனர்.
     கடந்த 2 நாள்களாக, ஊட்டியில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில், கொடைக்கானல் நாயுடுபுரம், ஆனந்தகிரி, அட்டுவம்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 8 பேர் பங்கேற்றனர். 12 மற்றும் 14 வயதுக்குள்பட்ட பிரிவு போட்டியில், கொடைக்கானலைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெங்கலப் பதக்கங்களை வென்றனர்.    அதையடுத்து, கொடைக்கானல் திரும்பிய இம்மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு, பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மாலை அணிவித்து இனிப்புகள் ஊட்டி வரவேற்றனர்.
     இது குறித்து கராத்தே மாஸ்டர் சக்திவேல் கூறியது: ஊட்டியில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மற்றும் இலங்கை, பூடான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.     இதில், கொடைக்கானல் மாணவர்கள் தங்கம் உள்ளிட்ட பதக்கங்கள் பெற்றுள்ளனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.