தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பழனி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

Updated On :13 பிப்ரவரி 2019, 8:10 am IST

பழனி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
    பழனி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு கடந்த 1 ஆம் தேதி இரவு முகூர்த்தக்கால் நடுதல் நடைபெற்றது. தொடர்ந்து 5 ஆம் தேதி கம்பம் சாட்டுதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கம்பத்துக்கு பால், பன்னீர், மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.
   இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாரியம்மன், சிம்ம வாகனம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் கொடி கோயிலை வலம் வந்து தங்கக்கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. 
    கம்பத்தடியில் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளிய மாரியம்மனுக்கும், கொடி மரத்துக்கும் தீபாராதனை காட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து கோயில் முன்பு உள்ள கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் சூடச்சட்டி, தீச்சட்டி எடுத்து வந்து நேர்ச்சை செலுத்தினர். 
    கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.