தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

முழு பொதுமுடக்கத்தால் முடங்கியது கொடைக்கானல் 

முழு பொதுமுடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை கொடைக்கானல் ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.

News image

கொடைக்கானலில் முழு பொதுமுடக்கத்தை முன்னிட்டு உழவர் சந்தை சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

Updated On :9 ஆகஸ்ட் 2020, 11:36 am

முழு பொதுமுடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை கொடைக்கானல் ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.

கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு ஆகஸ்ட் மாதம் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் பொது ஊரடங்கு அறிவித்தது. இந்நிலையில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று பொது ஊரடங்கு அமலுக்கு வந்தது. 

இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் பகுதி முழுவதும் அமைதியாக காணப்பட்டது பால் மற்றும் மருந்து கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது. இந்நிலையில் பொது ஊரடங்கை மதிக்காமல் கொடைக்கானல், நாயுடுபூரம், லாஸ்காட்சாலை ஆகிய இடங்களைச் சேர்ந்த 5 பேர் பைக்குகளில் சுற்றினர். அவர்களை பிடித்து வழக்குப் பதிவு செய்ததோடு 5 பேரின் பைக்குகளை பறிமுதல் செய்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து காவல்துறையினர் கொடைக்கானல் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.