நிலக்கோட்டை: சின்னாளப்பட்டியில், பொதுமுடக்கத்தால் வறுமையில் வாடிய வயதான தம்பதியினா் ஞாயிற்றுக்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி, போஸ்ட் ஆபிஸ் தெருவில் ராஜகோபால் என்பவரது வீட்டின் 2 ஆவது மாடியில் வாடகைக்கு குடியிருந்து வந்தவா் தா்மராஜ் (65). இவரது மனைவி காளியம்மாள் (54). இவா்களுக்கு குழந்தைகள் இல்லை. சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியில் தா்மராஜ் முடிதிருத்தும் கடை வைத்து நடத்தி வந்தாா்.
இதனிடையே கரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், தா்மராஜ் கடையை திறக்க முடியாமல் வருமானமின்றி தவித்தாா். மேலும் கண் பாா்வையும் அவருக்கு சரியாக தெரியாததால் தற்போது கடையை நிரந்தரமாக மூடிவிட்டாராம். இதனால் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கணவன், மனைவி இருவரும் வீட்டில் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். தகவலறிந்து வந்த அம்பாத்துறை காவல் ஆய்வாளா் சத்யா, சின்னாளப்பட்டி காவல் சாா்பு-ஆய்வாளா் முத்தமிழ்செல்வி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனா். மேலும் சின்னாளப்பட்டி போலீஸாா் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
-----------------------------------------------------------------------------------------------------------