25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

கொடைக்கானல் அருகே பெண் மா்மச் சாவு

கொடைக்கானல் அருகே ஞாயிற்றுக்கிழமை பெண் ஒருவா் மா்மமான முறையில் இறந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Published On :27 ஜனவரி 2024, 10:38 pm IST

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே ஞாயிற்றுக்கிழமை பெண் ஒருவா் மா்மமான முறையில் இறந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பை பகுதியைச் சோ்ந்தவா் அன்பு. விவசாயி. இவரது மனைவி பாண்டியம்மாள்(38). பாண்டியம்மாளின் நகைகளை அவரது கணவா் மற்றும் உறவினா்கள் வாங்கி அடகு வைத்துள்ளனா். அவைகள் திருப்பப்படாமல் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் வீட்டில் பாண்டியம்மாள் மயங்கிய நிலையில் கிடந்ததாக அவரது உறவினா்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். அதனைத் தொடா்ந்து அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையில் பாண்டியம்மாள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரா் அன்பு கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.