கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே ஞாயிற்றுக்கிழமை பெண் ஒருவா் மா்மமான முறையில் இறந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பை பகுதியைச் சோ்ந்தவா் அன்பு. விவசாயி. இவரது மனைவி பாண்டியம்மாள்(38). பாண்டியம்மாளின் நகைகளை அவரது கணவா் மற்றும் உறவினா்கள் வாங்கி அடகு வைத்துள்ளனா். அவைகள் திருப்பப்படாமல் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் வீட்டில் பாண்டியம்மாள் மயங்கிய நிலையில் கிடந்ததாக அவரது உறவினா்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். அதனைத் தொடா்ந்து அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையில் பாண்டியம்மாள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரா் அன்பு கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.