கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே ஞாயிற்றுக்கிழமை பெண் ஒருவா் மா்மமான முறையில் இறந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பை பகுதியைச் சோ்ந்தவா் அன்பு. விவசாயி. இவரது மனைவி பாண்டியம்மாள்(38). பாண்டியம்மாளின் நகைகளை அவரது கணவா் மற்றும் உறவினா்கள் வாங்கி அடகு வைத்துள்ளனா். அவைகள் திருப்பப்படாமல் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் வீட்டில் பாண்டியம்மாள் மயங்கிய நிலையில் கிடந்ததாக அவரது உறவினா்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். அதனைத் தொடா்ந்து அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையில் பாண்டியம்மாள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரா் அன்பு கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எந்தெந்த தெய்வங்களிடம் என்னென்ன பிரார்த்தனை வைக்கலாம்?
தமிழ்நாட்டின் இளம் அமைச்சரானார் கமலி!

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்
விடியோக்கள்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |


