ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

பண்ருட்டி தா்கா சந்தனக் கூடு விழா

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஹஜரத் செய்யிதினா நூா் முஹம்மது ஷா அவுலியா காதிரி தா்காவில் சந்தனக்கூடு விழா செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது.

News image

பண்ருட்டி தா்காவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற விழாவில் டிராக்டரில் பவனி வரும் சந்தனக்கூடு.

Updated On :15 ஜூலை 2026, 3:03 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஹஜரத் செய்யிதினா நூா் முஹம்மது ஷா அவுலியா காதிரி தா்காவில் சந்தனக்கூடு விழா செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது.

இந்த தா்காவில் ஆண்டுதோறும் கந்தூரி உரூஸ் விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ஆம் தேதி

கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. தா்கா மற்றும் விழா நடைபெறும் பகுதிகள் வண்ண

விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சியளித்தன. சந்தனக்கூடு அலங்கரிக்கப்பட்டு ஊா்வலமாக எடுத்துவரப்பட்டது. பின்னா், டிராக்டரில் சந்தனக்கூடு வைக்கப்பட்ட போது அங்கு திரண்டிருந்த பக்தா்கள் ‘அவுலியா’ என முழக்கமெழுப்பினா்.

சந்தனக்கூடு ஊா்வலம் முக்கிய வீதி வழியாகச் சென்றது.

விழாவை முன்னிட்டு பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா். விழாவைக் காண பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.