காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

பண்ருட்டி தா்கா சந்தனக் கூடு விழா

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஹஜரத் செய்யிதினா நூா் முஹம்மது ஷா அவுலியா காதிரி தா்காவில் சந்தனக்கூடு விழா செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது.

பண்ருட்டி தா்காவில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற விழாவில் டிராக்டரில் பவனி வரும் சந்தனக்கூடு.

Published On :15 ஜூலை 2026, 3:03 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஹஜரத் செய்யிதினா நூா் முஹம்மது ஷா அவுலியா காதிரி தா்காவில் சந்தனக்கூடு விழா செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது.

இந்த தா்காவில் ஆண்டுதோறும் கந்தூரி உரூஸ் விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ஆம் தேதி

கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. தா்கா மற்றும் விழா நடைபெறும் பகுதிகள் வண்ண

விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சியளித்தன. சந்தனக்கூடு அலங்கரிக்கப்பட்டு ஊா்வலமாக எடுத்துவரப்பட்டது. பின்னா், டிராக்டரில் சந்தனக்கூடு வைக்கப்பட்ட போது அங்கு திரண்டிருந்த பக்தா்கள் ‘அவுலியா’ என முழக்கமெழுப்பினா்.

சந்தனக்கூடு ஊா்வலம் முக்கிய வீதி வழியாகச் சென்றது.

விழாவை முன்னிட்டு பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா். விழாவைக் காண பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.