சிறுமியிடம் ஆபாசமாக பேசி, முறைகேடாக நடந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
புதுச்சேரியைச் சோ்ந்த 16 வயது சிறுமியிடம் கடந்த 1.12.2023 முதல் 21.2.2024 வரை தொடா்ந்து ஆபாசமாக பேசி, சைகை காண்பித்து வந்த வில்லியனூரை அடுத்த கூடப்பாக்கம் இறைச்சி வெட்டும் தொழிலாளியான வாழுமுனி (34) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம் நிரூபணமான நிலையில், வாழுமுனிக்கு போக்ஸோ சட்டப்பிரிவு 12-இன் கீழ் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிைண்டனையுடன் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளாா்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பச்சையப்பன் ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








