தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கொடைக்கானலில் கோழிக்குஞ்சு  உருவத்தில் உருளைகிழங்கு

கொடைக்கானலில் உருளைக்கிழங்கு பிரித்தெடுக்கும் பணியின் போது கிடைத்த கோழிக்குஞ்சு வடிவிலான உருளைக்கிழங்கை பொதுமக்கள் ஆர்வமாகப் பார்த்து சென்றனர்.

News image

கொடைக்கானலில் கோழிக் குஞ்சு  உருவத்தில் உருளைகிழங்கு

Updated On :20 ஆகஸ்ட் 2020, 12:38 pm

கொடைக்கானலில் உருளைக்கிழங்கு பிரித்தெடுக்கும் பணியின் போது கிடைத்த கோழிக்குஞ்சு வடிவிலான உருளைக்கிழங்கை பொதுமக்கள் ஆர்வமாகப் பார்த்து சென்றனர்.

கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளான மன்னவனுர், பூம்பாறை, செண்பகனுர், வில்பட்டி, மாட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு  மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 40 கிலோ சிப்பம் ரூ 2000 முதல் ரூ.2200 வரை விலைக்கு விற்பனையானது. தற்போது 40 கிலோ சிப்பம் ரூ.1800 முதல் ரூ.1600 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது செண்பகனுர், பிரகாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விளைந்த உருளைக்கிழங்கு எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியின் போது உருளைக்கிழங்கானது கோழிக் குஞ்சு போன்ற வடிவில் விளைந்திருந்தது. இந்த உருளைக் கிழங்கை பொது மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.