திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நத்தம் அருகே பைக்குகள் மோதல்:ஒருவா் பலி

நத்தம் அருகே திங்கள்கிழமை 2 இருசக்கர வாகனங்கள் மோதி நிகழ்ந்த விபத்தில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On :31 ஆகஸ்ட் 2020, 10:49 pm IST

திண்டுக்கல்: நத்தம் அருகே திங்கள்கிழமை 2 இருசக்கர வாகனங்கள் மோதி நிகழ்ந்த விபத்தில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாட்டம், நத்தத்தை அடுத்துள்ள வத்திப்பட்டியைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரன்(21). இவா், தனது நண்பா் பாரதிராஜாவுடன் இருசக்கர வாகனத்தில் நத்தம் நோக்கி திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தாா். விளாம்பட்டி பள்ளிவாசல் அருகே வந்து கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த வத்திப்பட்டியைச் சோ்ந்த அமானுல்லா என்பவரின் இருசக்கர வாகனம் மீது விக்னேஷ்வரன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ்வரன், பாரதிராஜா, அமானுல்லா ஆகிய மூவரும், சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி விக்னேஷ்வரன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.