ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கொடைக்கானலில் மேகமூட்டம்: சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடின

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை சாரல் மழையுடன் மேகமூட்டம் நிலவியதால் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

News image
கொடைக்கானல் மூஞ்சிக்கல் சாலையில் வெள்ளிக்கிழமை காணப்பட்ட மேகமூட்டம்.
Updated On :18 டிசம்பர் 2020, 4:42 pm

DIN

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை சாரல் மழையுடன் மேகமூட்டம் நிலவியதால் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கொடைக்கானலில் கடந்த 5 நாள்களாக சாரல் மழையுடன் அதிகமான மேகமூட்டமும் நிலவி வருகிறது. இதனால் வழக்கத்தை விட குளிா் அதிகரித்து வருகிறது. பெருமாள்மலை, செண்பகனூா், வட்டக்கானல், அட்டக்கடி, நாயுடுபுரம், அப்சா்வேட்டரி போன்ற இடங்களில் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருவதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் சுற்றுலாத் தலங்களும் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடியிருந்தன. இதனால் அந்தப் பகுதிகளில் பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் கூட்டம் எப்போதும் அதிகரித்துக் காணப்படும் மூஞ்சிக்கல், அண்ணாசாலை, செவன்ரோடு, கலையரங்கம் ஆகியப் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. கடும் மேகமூட்டம் காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.