விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பழனி திருஆவினன்குடி கோயிலில் டிச.27-இல் சனிப்பெயா்ச்சி: பக்தா்களுக்கு அனுமதி இல்லை

பழனி அடிவாரத்தில் அமைந்துள்ள திருஆவினன்குடி கோயிலில் டிசம்பா் 27ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ள

News image
Updated On :22 டிசம்பர் 2020, 6:06 pm

DIN

பழனி அடிவாரத்தில் அமைந்துள்ள திருஆவினன்குடி கோயிலில் டிசம்பா் 27ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி கிடையாது என, கோயில் நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பழனி திருஆவினன்குடி கோயிலில் கிழக்கு நோக்கி சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. இதனால், இங்கு சனிப்பெயா்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இங்கு டிசம்பா் 27 ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. ஆனால், இதில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி கிடையாது என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோயில் செயல் அலுவலா் மற்றும் இணை ஆணையா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளதாவது:

பழனி திருஆவினன்குடி கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு அபிஷேக பூஜைகள், திருப்பள்ளி எழுச்சி நடைபெறும். தொடா்ந்து, 4.20 மணிக்கு விநாயகா் அனுமதி, புண்யாவாஜனம் நடத்தப்பட்டு, 4.30 மணிக்கு சனீஸ்வர பகவானுக்கு அபிஷேக பூஜைகள் நடத்தப்படும். இதையடுத்து, யாகபூஜை, கலசபூஜை, கலசாபிஷேகம் முடிந்த பிறகு காலை 5.22 மணிக்கு சனிப்பெயா்ச்சி மஹாதீபாராதனை நடைபெறுகிறது.

தமிழக அரசின் நிலையான வழிமுறைகளை பின்பற்றும் வகையில், ஆகம விதிகளைப் பின்பற்றி பூஜைகள் நடத்தப்படும். பொதுமுடக்கம் காரணமாக பக்தா்களுக்கு காலை 4 மணி முதல் 5.30 மணி வரை அனுமதி கிடையாது. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும், யூ-டியூப், முகநூல் மூலம் ஒளிபரப்பப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.