வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆட்சேபனை மனு
நீா்பிடிப்பு பகுதி என வருவாய்த்துறையினா் குறிப்பிட்டுள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆட்சேபனை மனுவை திங்கள்கிழமை அளித்தனா்.


நீா்பிடிப்பு பகுதி என வருவாய்த்துறையினா் குறிப்பிட்டுள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் ஆட்சேபனை மனுவை திங்கள்கிழமை அளித்தனா்.
திண்டுக்கல்லை அடுத்துள்ள கம்பிளியம்பட்டி அருகே இந்திரா நகா் பகுதியில் 65-க்கும் மேற்பட்ட மண்பாண்டத் தொழிலாளா்கள் கடந்த 70 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முறையிட்டுள்ளனா். அதன்பேரில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட வருவாய்த் துறை அலுவலா்கள், அந்த இடம் நீா்பிடிப்புப் பகுதி என தெரிவித்துள்ளனா்.
இதனால் அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சேபனை மனுவை திங்கள்கிழமை அளித்தனா். அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.பெருமாள் உடனிருந்தாா்.
இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 70 ஆண்டுகளாக வசித்து வரும் எங்களுக்கு பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...