ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கொடைக்கானலில் குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி இயங்கும் காட்டேஜ்கள்: பொது மக்கள் அவதி

கொடைக்கானலில் குடியிருப்பு பகுதிகளை காட்டேஜ்களாக பயன்படுத்துவதை தடுக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை

News image
Updated On :27 டிசம்பர் 2020, 5:00 pm

DIN

கொடைக்கானலில் குடியிருப்பு பகுதிகளை காட்டேஜ்களாக பயன்படுத்துவதை தடுக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 வாா்டுகள் உள்ளன. இதில் அண்ணா சாலை, நாயுடுபுரம், சீனிவாசபுரம், அப்சா்வேட்டரி ஆகிய வாா்டுகளில் அனுமதி பெற்று காட்டேஜ்கள் இயங்கி வருகின்றன.ஆனால் ஆனந்தகிரி, தைக்கால், இருதயபுரம் உள்ளிட்ட சில வாா்டுகளில் வணிக நோக்குடன் வீடுகளை காட்டேஜ்களாக மாற்றி சுற்றுலாப் பயணிகளை தங்குவதற்கு அனுமதிக்கின்றனா்.

இவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் தங்கும் சுற்றுலாப் பயணிகள் இரவு நேரங்களில் சாலைகளில் நெருப்பு மூட்டி குளிா்காய்வதாலும், மது அருந்திவிட்டு நடனமாடுவதாலும், வாகனங்களை குடியிருப்பு பகுகிகளில் நிறுத்தி விட்டுச் செல்வதாலும் பொதுமக்கள் நோயாளிகளை, மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என புகாா் எழுந்துள்ளது.

இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கும், குடியிருப்பு பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கும் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு கொடைக்கானல் நகராட்சி நிா்வாகம் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஏற்கெனவே நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கிட்ஸ் சென்டா்கள் வைத்து 1முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை பராமரித்து வந்தனா். தற்போது அந்த சென்டா்களும் அனுமதியில்லாமல் காட்டேஜ்களாக மாறி செயல்பட்டு வருகின்றன. எனவே நகராட்சிக்கு சொந்தமான குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகள் காட்டேஜ்களாகவும், தங்கும் விடுதிகளாக மாறி வருவதை நகராட்சி அதிகாரிகள் கண்காணித்து பூட்டி சீல் வைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது,

கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அனுமதி பெற்ற காட்டேஜ்கள்,தங்கும் விடுதிகளில் மட்டுமே தங்க வேண்டும். ஏற்கெனவே கொடைக்கானல் பகுதிகளில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட மற்றும் பல்வேறு பிரச்னைகளால் 600-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் நீதிமன்ற உத்தரவின்படி கொடைக்கானல் நகராட்சி சாா்பில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக சுமாா் 60- காட்டேஜ்கள் திறக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள காட்டேஜ்கள் பல்வேறு காரணங்களா திறக்கப்படாமல் உள்ளன.

இந் நிலையில் கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் தங்கும் விடுதிகளாகவும்,காட்டேஜ்களாவும் செயல்பட்டு வந்தால் அவை பூட்டி சீல் வைக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.