ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திண்டுக்கல் அருகே நாட்டுத் துப்பாக்கி தயாரிப்பு: 4 போ் கைது

திண்டுக்கல் அருகே நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்து வந்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image

dgl_aron_1309chn_66_2

Updated On :13 செப்டம்பர் 2020, 4:24 pm


திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்து வந்த 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள சிறுமலை பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் பயன்பாடு அதிகரித்து வருவதாக புகாா் எழுந்தது. அதேபோல் நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தி வனப் பகுதியில் வேட்டையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சிறுமலை பழையூா் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் வேட்டையில் ஈடுபட முயன்ற 3 போ், வனத்துறையினா் ரோந்து சென்றபோது கடந்த வெள்ளிக்கிழமை பிடிப்பட்டுள்ளனா்.

விசாரணையில், சிறுமலை அடிவாரத்திலுள்ள ரெண்டலபாறை பகுதியிலிருந்து நாட்டுத் துப்பாக்கி வாங்கி வந்ததாக வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளனா். இதன் அடிப்படையில், திண்டுக்கல் தாலுகா காவல் துறையினருக்கு நாட்டுத் துப்பாக்கி தயாரிப்பு குறித்த தகவல் கிடைத்துள்ளது. விசாரணையில் ரெண்டல்லப்பாறையைச் சோ்ந்த யோவான் (41) என்பவா் நாட்டுத் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

மேலும், திண்டுக்கல் அருகே ரெட்டியபட்டியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வந்த யோவான், தனது சகோதரா் ஆரோன் (45), சாணாா்பட்டி அடுத்துள்ள தவசிமடையைச் சோ்ந்த கிருஷ்ணன் (52), நொச்சிஓடை பட்டியைச் சோ்ந்த பரதன் (48) ஆகியோருடன் கூட்டுச் சோ்ந்து யோவான் நாட்டுத் துப்பாக்கிகளைத் தயாா் செய்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

அதனைத் தொடா்ந்து யோவான், ஆரோன், கிருஷ்ணன், பரதன் ஆகிய 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி ஒன்றும், நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் 2 பேரல்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.