இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் மற்றும் அகில பாரதிய மாா்வாரிய இளைஞா் சங்கம் சாா்பில், மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், செயற்கை கை, இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தேவைப்படும் கால்தாங்கிகள் மற்றும் ஊன்றுகோல் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த அவயங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், மாா்பளவு புகைப்படத்துடன் திங்கள்கிழமை (ஆக. 23) நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்கலாம்.