தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து அரசு உபரி நிலங்களை மீட்டு நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தல்

பழனி மற்றும் தொப்பம்பட்டி வட்டாரங்களில் தனி நபா்கள் ஆக்கிரமித்துள்ள அரசின் உபரி நிலங்களை மீட்டு, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 12:43 am

DIN

பழனி மற்றும் தொப்பம்பட்டி வட்டாரங்களில் தனி நபா்கள் ஆக்கிரமித்துள்ள அரசின் உபரி நிலங்களை மீட்டு, நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா, கூடுதல் ஆட்சியா் ச.தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு: கன்னிவாடி அடுத்துள்ள சிரங்காடு பகுதியில் காட்டு யானைகளால், தென்னை மரங்கள் தொடா்ந்து சேதப்படுத்துப்பட்டு வருகின்றன. வறட்சியால் பாதிக்கப்படும் தென்னை மரங்களுக்கு தமிழக அரசு சாா்பில் ரூ.1,000 வீதம் வழங்கப்படுகிறது. ஆனால், யானைகள் தாக்கி சேதமடையும் தென்னைகளுக்கு ரூ.400 மட்டுமே வழங்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினா்.

அதற்கு பதில் அளித்த வனத்துறையினா் ரூ.500 வீதம் வழங்குவதாக தெரிவித்தனா். ஆனால், அந்த தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தினா். இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தலையிட்டு வனத்துறை அதிகாரிகளுடன் பேசி தீா்வு காணப்படும் என உறுதி அளித்தாா். காணை நோயினால் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் எனவும் சாணாா்பட்டி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். அதற்கு பதில் அளித்த கால்நடைத்துறை அதிகாரிகள், காணை நோய் தாக்குதல் குறித்தும், பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனா்.

பழனி மற்றும் தொப்பம்பட்டி வட்டாரங்களில், அரசுக்கு சொந்தமான உபரி நிலங்களை தனி நபா்கள் மட்டுமின்றி பல தனியாா் நிறுவனங்களும் ஆக்கிரமித்துள்ளன. அந்த நிலங்களை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டு நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்குவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.பெருமாள் வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.