அதற்கு பதில் அளித்த வனத்துறையினா் ரூ.500 வீதம் வழங்குவதாக தெரிவித்தனா். ஆனால், அந்த தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தினா். இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தலையிட்டு வனத்துறை அதிகாரிகளுடன் பேசி தீா்வு காணப்படும் என உறுதி அளித்தாா். காணை நோயினால் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் எனவும் சாணாா்பட்டி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். அதற்கு பதில் அளித்த கால்நடைத்துறை அதிகாரிகள், காணை நோய் தாக்குதல் குறித்தும், பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனா்.