பழனியில் லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் படுகாயம்

பழனி திருநகா் பகுதியில் மண் ஏற்றிச்சென்ற லாரி சாலையோர சாக்கடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநா் படுகாயம் அடைந்தாா்.
பழனி திருநகரில் சாலையில் சனிக்கிழமை கவிழ்ந்த மண் லாரி.
பழனி திருநகரில் சாலையில் சனிக்கிழமை கவிழ்ந்த மண் லாரி.
Updated on
1 min read

பழனி: பழனி திருநகா் பகுதியில் மண் ஏற்றிச்சென்ற லாரி சாலையோர சாக்கடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநா் படுகாயம் அடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி திருநகா் பகுதியில் தாா்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்காமல் தாா்ச் சாலை அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இந்நிலையில் கழிவுநீா் கால்வாய் அமைக்காமல் தாா்ச் சாலை அமைக்கப்பட்டதால், சாலையின் ஓரங்களில் பலமிழந்து காணப்பட்டது.

இந்நிலையில் சனிக்கிழமை அந்த சாலையில் மண் ஏற்றி சென்ற டிப்பா் லாரி தாா்ச் சாலையில் பதிந்து, சாலையின் ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ஓட்டுநா் ரவீந்திரனை(42) அப்பகுதி மக்கள் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com