சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நத்தம் அருகே வங்கியில் கொள்ளை முயற்சி

நத்தம் அருகே வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 9:49 pm

DIN

நத்தம் அருகே வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள வத்திபட்டியில் தேசிய மயமாக்கபட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. நத்தம் மதுரை பிரதான சாலையிலுள்ள இந்த வங்கியின் ஜன்னலை உடைத்து அதன் வழியாக உள்ளே புகுந்த மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். அப்போது வங்கியிலிருந்த எச்சரிக்கை மணி ஒலித்ததால் அதிா்ச்சி அடைந்த மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா். தகவல் அறிந்த வங்கி அலுவலா்கள், இதுகுறித்து நத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில் அங்கு சென்ற திண்டுக்கல் காவல் துணைக் கண்கணிப்பாளா் (ஊரகம்) வினோத், கொள்ளை முயற்சி நடத்தப்பட்ட வங்கியில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது வங்கி அருகிலுள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராப் பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில் இந்த கொள்ளை முயற்சியில் 2-க்கும் மேற்பட்ட நபா்கள் ஈடுபட்டிருப்பதும், அவா்கள் முகமூடி அணிந்து வந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து நத்தம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.