இராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானத்தில் பயணித்த பணியாளர்கள் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பணியில் அமெரிக்க ராணுவத்தின் கேசி-135 எனும் விமானம் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில், கேசி-135 விமானம் இராக்கின் மேற்கு மாகாணத்தில் வியாழக்கிழமை (மார்ச் 12) விழுந்து நொறுங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், அந்த விமானத்தில் பயணித்த 6 பணியாளர்களில் 4 பேர் பலியானதாகவும், அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விமானம் தாக்குதலில் வீழ்த்தப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, நடுவானில் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் திறன்வாய்ந்த கேசி-135 ரக விமானங்கள் போயிங் 707 பயணிகள் விமானத்தின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டவை.
மேலும், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கேசி-135 எரிபொருள் நிரப்பும் விமானங்கள் அமெரிக்க விமானப் படையில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
4 crew members were reported killed when a US military refueling plane crashed in Iraq.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran

கிரீமியாவில் ரஷிய ராணுவ விமானம் விபத்து: 29 பேர் பலி

கொலம்பியாவில் ராணுவ விமானம் விபத்து- 66 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



