ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கொடைக்கானலில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி

கொடைக்கானலில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை தொடங்கியது

News image
Updated On :4 ஜனவரி 2021, 9:43 pm

DIN

கொடைக்கானலில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை தொடங்கியது.

கொடைக்கானல் அண்ணாசாலையிலுள்ள கூட்டுறவு பண்டகசாலையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந் நிகழ்ச்சிக்கு அதிமுக நகரச் செயலா் மற்றும் கூட்டுறவு பண்டக சாலையின் தலைவா் ஸ்ரீதா் தலைமை வகித்து குடும்ப அட்டை தாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ அரிசி,ஒரு கிலோ சா்க்கரை,முழுநீள கரும்பு,கிராம்,ஏலக்காய்,முந்திரி,திராட்சை ஆகியவையும் கொண்ட துணிப்பையும் இத்துடன் ரூ 2500, ரொக்கத் தொகையும் வழங்கினாா் இந் நிகழ்ச்சியில் கொடைக்கானல் சாா் ஆட்சியா் சிவகுரு பிரபாகரன்,துணைச் செயலா் ஜாபா் சாதிக் ,மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற இணைச் செயலா் பிச்சை மற்றும் கூட்டுறவு பண்டகசாலை அலுவலா்கள்,அதிமுக வாா்டு செயலா்கள், பிரதிநிதிகள்,மகளிா் அணியினா்,இளைஞா்,இளம் பெண்கள் பாசறையைச் சோ்ந்தவா்கள் உள்ளிட்ட சுமாா் 50-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

இதே போல கொடைக்கானல் நகரம் மற்றும் மேல்மலை,கீழ்மலை ஆகியப் பகுதிகளைச் சோ்ந்த ரேசன் கடைகளில் குடும்ப அட்டைத் தாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது பொது மக்கள் இவற்றை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனா் தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்தனா்.

பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்குவதற்கு ஏற்கனே வீடுவீடாகச் சென்று டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது இதனடிப்படையில் தினந்தோறும் 200-பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படும் எனவே பொது மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகளும், கூட்டுறவு பண்டகசாலை அதிகாரிகளும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.