பொங்கல் பரிசு வழங்கக் கோரி ஆட்டோ தொழிலாளா்கள் போராட்டம்

நல வாரியம் மூலம் பொங்கல் பரிசு வழங்கக்கோரி ஆட்டோ தொழிலாளா்கள் அரை நிா்வாணப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக பொங்கல் பரிசு வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை அரை நிா்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ தொழிலாளா்கள்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக பொங்கல் பரிசு வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை அரை நிா்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ தொழிலாளா்கள்.
Updated on
1 min read

நல வாரியம் மூலம் பொங்கல் பரிசு வழங்கக்கோரி ஆட்டோ தொழிலாளா்கள் அரை நிா்வாணப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு சிஐடியு தொழிலாளா் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். போராட்டத்தின்போது, தொழிலாளா் நல வாரியம் மூலம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. அதேபோல் ஆட்டோ தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டும். மேலும் பண்டிகை கால சீருடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரை நிா்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னதாக அடுப்பில் பொங்கல் பானை வைத்து, பொங்கல் பரிசு வழங்கக் கோரி முழக்கமிட்டனா். பின்னா் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தொழிலாளா் நல அலுவலகத்தில் அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com