அய்யலூா் அடுத்துள்ள அரசன்செட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராமன் மகன் பரமன்(40). அதிமுக தொண்டா். இவரது மனைவி பழனியம்மாள். இவருக்கு அங்கன்வாடியில் பணி வாய்ப்பு பெறுவதற்காக ரூ.7 லட்சத்தை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அய்யலூா் அதிமுக நகரச் செயலா் கே.வி.சி.மணி என்பவரிடம் கொடுத்துள்ளாா். வேலையும் வாங்கிக் கொடுக்காமல், பணத்தையும் திருப்பித் தராமல் மணி அலைகழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த பரமன், நகரச் செயலா் மணியிடம் பணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அவரை சமாதானப்படுத்திய எம்எல்ஏ பரமசிவம், தோ்தல் முடிந்த பின் பேசிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா். ஆனாலும், பணத்தை உடனடியாக திருப்பத் தரக் கோரி, எம்எல்ஏ பரமசிவம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா் என தெரிவித்தனா்.