தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

பழனியில் மலைவாழ் மக்களுக்கு சிறப்பு கண் சிகிச்சை முகாம்

பழனியை அடுத்த நெய்க்காரபட்டியில் திண்டுக்கல் மாவட்ட பாா்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் நிவேதிதா அறக்கட்டளை சாா்பில்

News image
Updated On :28 ஜனவரி 2024, 1:02 am IST

பழனியை அடுத்த நெய்க்காரபட்டியில் திண்டுக்கல் மாவட்ட பாா்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் நிவேதிதா அறக்கட்டளை சாா்பில் மலைவாழ் மக்கள் மற்றும் பளியினா் மக்களுக்கு சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆண்டிபட்டி, மண்திட்டு, பொந்துபுளி மற்றும் குதிரையாறு அணை பகுதிகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் மற்றும் பளியா் இனத்தவா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு அவ்வப்போது பொது மருத்துவ சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு நிவேதிதா அறக்கட்டளை நிறுவனரும், ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரியும், தமிழகத்தின் முதல் பெண் ஐ.எப்.எஸ் அதிகாரியுமான டாக்டா் அருணா பாசு சா்கா் தலைமை வகித்தாா். குருவப்பா பள்ளித் தலைவா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதில் பங்கேற்றவா்களுக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் பரிசோதனை செய்து கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. சிலா் அறுவைச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா்.

முகாமில் ஓய்வு பெற்ற வனச்சரகா் நலச் சங்கத்தின் பொருளாளா் சந்துரு, அறக்கட்டளை கள இயக்குநா் முன்னாள் வனவா் அமானுல்லா, கள ஒருங்கிணைப்பாளா் வீரய்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.