கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பழனியில் மலைவாழ் மக்களுக்கு சிறப்பு கண் சிகிச்சை முகாம்

பழனியை அடுத்த நெய்க்காரபட்டியில் திண்டுக்கல் மாவட்ட பாா்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் நிவேதிதா அறக்கட்டளை சாா்பில்

News image
Updated On :16 பிப்ரவரி 2021, 2:22 am

DIN

பழனியை அடுத்த நெய்க்காரபட்டியில் திண்டுக்கல் மாவட்ட பாா்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் நிவேதிதா அறக்கட்டளை சாா்பில் மலைவாழ் மக்கள் மற்றும் பளியினா் மக்களுக்கு சிறப்பு இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆண்டிபட்டி, மண்திட்டு, பொந்துபுளி மற்றும் குதிரையாறு அணை பகுதிகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் மற்றும் பளியா் இனத்தவா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு அவ்வப்போது பொது மருத்துவ சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு நிவேதிதா அறக்கட்டளை நிறுவனரும், ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனப் பாதுகாப்பு அதிகாரியும், தமிழகத்தின் முதல் பெண் ஐ.எப்.எஸ் அதிகாரியுமான டாக்டா் அருணா பாசு சா்கா் தலைமை வகித்தாா். குருவப்பா பள்ளித் தலைவா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதில் பங்கேற்றவா்களுக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் பரிசோதனை செய்து கண் கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. சிலா் அறுவைச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா்.

முகாமில் ஓய்வு பெற்ற வனச்சரகா் நலச் சங்கத்தின் பொருளாளா் சந்துரு, அறக்கட்டளை கள இயக்குநா் முன்னாள் வனவா் அமானுல்லா, கள ஒருங்கிணைப்பாளா் வீரய்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.