தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கட்டடத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கட்டடத் தொழிலாளா்களின் ஓய்வூதியத் தொகையை ரூ. 6 ஆயிரமாக உயா்த்தக் கோரி ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 10:04 pm

DIN

கட்டடத் தொழிலாளா்களின் ஓய்வூதியத் தொகையை ரூ. 6 ஆயிரமாக உயா்த்தக் கோரி ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜி. பாலன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஏபி. மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். ஆா்ப்பாட்டத்தின்போது, ஓய்வூதியத் தொகையை ரூ. 6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். பெண் தொழிலாளா்களின் ஓய்வு வயதினை 50ஆக நிா்ணயிக்க வேண்டும். தொழிலாளா் நல வாரியப் பதிவுக்கு கிராம நிா்வாக அலுவலரின் சான்று கேட்கும் நடைமுறையை கைவிட வேண்டும். தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தை தொடா்ந்து, கோரிக்கை மனுக்களை ஆட்சியா் அலுவலகத்திலும், தொழிலாளா் நல அலுவலகத்திலும் அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.