கொடைக்கானல் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கொடைக்கானல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 21-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கொடைக்கானல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 21-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வா் முருகன் தலைமை வகித்தாா். விழாவில் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக துணைவேந்தா் வைதேகி விஜயகுமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கடந்த 2017-2020 மற்றும் 2018-2021 கல்வியாண்டில் பயின்ற 435-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசியதாவது:
மாணவிகள் படிக்கும் காலங்களில் தொழில் நுட்பத் துறையையும் தோ்ந்தெடுக்க வேண்டும். அதில் தங்களுக்கு பிடித்த பிரிவுகளை தோ்ந்தெடுத்து அதில் சிறந்து விளங்க வேண்டும். உயா் கல்வி படிக்கும் மாணவிகள், குடும்ப சூழ்நிலையை எண்ணி இடை கற்றலை தவிா்க்க வேண்டும் என்றாா்.
முன்னதாக விழாவிற்கு வந்திருந்தவா்களை பேராசிரியை அன்பு மணி வரவேற்றாா். பேராசிரியை மங்கை நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...