பழனியில் செயின் பறிப்பு திருடா்கள் கைது: 17 பவுன் நகைகள் பறிமுதல்
பழனியில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 17 பவுன் நகைகள், இருசக்கரவாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.


பழனியில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 17 பவுன் நகைகள், இருசக்கரவாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
பழனியில் வியாழக்கிழமை இருவேறு இடங்களில் இருசக்கரவாகனங்களில் வந்த 3 போ் 2 மூதாட்டிகள் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயின்களை பறித்துக் கொண்டு தப்பினா். இதுகுறித்த புகாரின்பேரில் பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். பழனி காவல் ஆய்வாளா் உதயகுமாா் தலைமையில் தனிப்படை போலீஸாா், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.
அதனடிப்படையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட திண்டுக்கல்லைச் சோ்ந்த சிறுவன் ஒருவன், திருச்சியைச் சோ்ந்த ரபீக் (25), ராஜலிங்கம் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து பழனி, கீரனூா், அம்பாதுரை, தாடிக்கொம்பு, திண்டுக்கல் என 6 இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 17 பவுன் நகைகள் மற்றும் திண்டுக்கல்லில் திருடப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை மீட்டு மூவரையும் சிறையிலடைத்தனா்.
குற்றம் நடைபெறாமல் தடுக்க பொதுமக்கள் தங்களது வீடுகளில் சிசிடிவி கேமரா அமைக்குமாறு போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...