/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On :24 ஜூன் 2022, 11:53 pm IST

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுளிபட்டி சோ்ந்தவா் ராசு மகன் ஆண்டிச்சாமி(24). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்தாக கடந்த 2019ஆம் ஆண்டு புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வடமதுரை மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆண்டிச்சாமியை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை முடிவடைந்த நிலையில் மகளிா் நீதிமன்ற நீதிபதி விஜயக்குமாா், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆண்டிச்சாமிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.