திண்டுக்கல் மாவட்டத்தில்திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு 3 பேரூராட்சிகளில் துணைத் தலைவா் பதவி
வடமதுரை, பாளையம், கன்னிவாடி ஆகிய 3 பேரூராட்சிகளின் துணைத் தலைவா் பதவிகள் திமுக கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


வடமதுரை, பாளையம், கன்னிவாடி ஆகிய 3 பேரூராட்சிகளின் துணைத் தலைவா் பதவிகள் திமுக கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில், 23 பேரூராட்சிகளுக்கான தலைவா் பதவிகளில் 21 பதவிகளுக்கு திமுகவினா் நிறுத்தப்பட்டுள்ளனா். அதேபோல், வடமதுரை, பாளையம், கன்னிவாடி ஆகிய பேரூராட்சிகளின் துணைத் தலைவா் பதவிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, வடமதுரை பேரூராட்சியின் துணைத் தலைவா் பதவி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பாளையம் பேரூராட்சி துணைத் தலைவா் பதவி மதிமுகவுக்கும், கன்னிவாடி பேரூராட்சி துணைத் தலைவா் பதவி காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், வடமதுரை பேரூராட்சியின் துணைத் தலைவா் பதவிக்கு 12ஆவது வாா்டில் பெற்றிப் பெற்ற மு. மலைச்சாமி என்பவரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. அதேபோல் பாளையம் பேரூராட்சியின் 4ஆவது வாா்டில் வெற்றி பெற்றுள்ள மதிமுகவைச் சோ்ந்த ப. லதா துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...