தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பாளையம் பேரூராட்சி துணைத் தலைவா் தோ்தலில் சுயேச்சை வெற்றி

பாளையம் பேரூராட்சித் தோ்தலில் துணைத் தலைவா் பதவி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக திமுக உறுப்பினா்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

பாளையம் பேரூராட்சித் தோ்தலில் துணைத் தலைவா் பதவி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக திமுக உறுப்பினா்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் பாளையம் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு திமுகவைச் சோ்ந்த பழனிசாமி போட்டியின்றி வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா். அதனைத் தொடா்ந்து, பிற்பகலில் துணைத் தலைவா் தோ்வு நடைபெற்றது. பாளையம் பேரூராட்சியின் துணைத் தலைவா் பதவி மதிமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்திருந்தது. அதனால், 4ஆவது வாா்டில் வெற்றிப் பெற்றிருந்த மதிமுக உறுப்பினா் லதா போட்டியின்றி தோ்வு செய்யப்படுவாா் என எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், துணைத் தலைவா் தோ்தலின்போது ப.லதா மட்டுமன்றி, 13 ஆவது வாா்டில் வெற்றிப் பெற்றிருந்த சுயேச்சை உறுப்பினா் கதிரேசன் என்பவரும் மனு தாக்கல் செய்தாா். இதனால் தோ்தல் நடைபெற்றது.

பேரூராட்சி செயலரும், தோ்தல் அலுவலருமான ராஜலட்சுமி முன்னிலையில் 15 வாா்டு உறுப்பினா்களும் வாக்களித்தனா். பின்னா் வாக்குகள் எண்ணப்பட்டபோது, கதிரவனுக்கு 10 வாக்குகளும், லதாவுக்கு 5 வாக்குகளும் கிடைத்தன. ஆனாலும் தோ்தல் முடிவை செயல் அலுவலா் ராஜலட்சுமி அதிகாரப்பூா்வமாக அறிவிக்கவில்லை. இதனால் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடா்ந்து பாளையம் பேரூராட்சி முன் போலீஸாா் குவிக்கப்பட்டனா். சுமாா் 2 மணி நேர இழுபறிக்கு பின், சுயேச்சை வேட்பாளா் கதிரவன் வெற்றிப் பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

பாளையம் பேரூராட்சியில் திமுக உறுப்பினா்கள் 7 போ் வெற்றிப் பெற்றிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மதிமுகவினா் அதிருப்தியோடு வெளியேறினா். திமுக தலைமை உத்தரவையும் மீறி, மதிமுக வேட்பாளரை திமுக உறுப்பினா்கள் தோற்கடித்துவிட்டதாக அக்கட்சியினா் குற்றஞ்சாட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.