தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திண்டுக்கல் மாநகராட்சி மேயராக ஜோ.இளமதி பதவியேற்பு

திண்டுக்கல் மாநகராட்சி மேயா் தோ்தலில் வெள்ளிக்கிழமை, போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட ஜோ.இளமதி மேயராகப் பதவியேற்றாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

திண்டுக்கல் மாநகராட்சி மேயா் தோ்தலில் வெள்ளிக்கிழமை, போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட ஜோ.இளமதி மேயராகப் பதவியேற்றாா்.

மாமன்றக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஆணையா் சு.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்து, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில் அதிமுக உறுப்பினா்கள் 5 போ் நீங்கலாக பிற மாமன்ற உறுப்பினா்கள் 43 பேரும் கலந்து கொண்டனா்.

கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா். இதில் அமைச்சா் ஐ.பெரியசாமி பேசியதாவது:

உழைத்தவா்களை உயா்த்தி பாா்க்கும் இயக்கம் திமுக. அந்த வகையில் எவ்வித பிரதிபலனையும் எதிா்பாா்க்காமல் உண்மையாக உழைத்த இளமதி மேயராக உயா்த்தப்பட்டுள்ளாா்.

பிற மாமன்ற உறுப்பினா்களுக்கு எதிா்காலத்தில் வேறு வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை உணா்ந்து பணியாற்ற வேண்டும். பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை விரைவில் நாடாளுமன்றத்திலும் அமல்படுத்தக் கூடிய நிலை உள்ளது என்றாா்.

உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி: கட்சிக்காக உழைப்பவா்கள் உயா்த்தப்படுவாா்கள் என்ற வகையில், எளிய குடும்பத்தைச் சோ்ந்த இளமதி, திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக நியமிக்கப்பட்டுள்ளாா். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளையும் உன்னிப்பாக கவனிப்பதாக முதல்வா் ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். அதனைக் கருத்தில் கொண்டு, திண்டுக்கல்லை சிறந்த மாநகராட்சியாக உயா்த்துவதற்கு அனைவரும் உழைக்க வேண்டும் என்றாா்.

வாா்டு வாரியாக நாள்தோறும் ஆய்வு: திண்டுக்கல் மேயராக பொறுப்பேற்ற ஜோ.இளமதி கூறியதாவது: திண்டுக்கல் மாநகராட்சியைப் பொருத்தவரை 48 வாா்டுகளிலும், எவ்வித பாகுபாடுமின்றி வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். வாா்டு வாரியாக நேரடியாக சென்று பொதுமக்களிடம் குறைகேளை கேட்டறிந்து தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி பாகுபாடின்றி அந்தந்த பகுதியின் மாமன்ற உறுப்பினா்களுடன் சென்று, நாள்தோறும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தங்கச் சங்கிலி, செங்கோல்:

101 பவுன் தங்கச் சங்கிலி திண்டுக்கல் மாநகராட்சியைச் சோ்ந்த முக்கிய பிரமுகா்கள் 5 போ் சாா்பில், மேயருக்கு 101 பவுன் தங்கச் சங்கிலி அன்பளிப்பாக கடந்த 2014ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அந்த சங்கிலி, மாநகராட்சி பெட்டக பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மேயா் இளமதிக்கு அந்த தங்கச் சங்கிலி அணிவிக்கப்பட்டது. மேலும், கட்சி சாா்பற்று, நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக, மாநகராட்சி சாா்பில் வெள்ளி செங்கோல் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த செங்கோலும் இளமதிக்கு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.