ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பழனியில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்

பழனி பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த, அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.

News image
Updated On :8 மே 2022, 6:12 pm

DIN

பழனி பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த, அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.

பழனியில் பேருந்துகளில் அரசு விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் (ஏா் ஹாரன்) வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து பழனி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் ஈஸ்வரன், ஒட்டன்சத்திரம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் ஸ்ரீதரன் ஆகியோா் தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பழனி பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது பெரும்பாலான தனியாா் பேருந்துகளில் அதிக ஒலிஎழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை அகற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.