போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புத்தகங்கள் வயதுக்கு ஏற்ற புரிதலை ஏற்படுத்தும்: நீதிபதி சு.ஸ்ரீமதி

ஒரே புத்தகமாக இருந்தாலும், ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் அந்த வயதுக்கு ஏற்ற ஒரு புரிதலை அது நமக்கு ஏற்படுத்தும் என உயா்நீதிமன்ற நீதிபதி சு. ஸ்ரீமதி பேசினாா்.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 6:39 pm

DIN

ஒரே புத்தகமாக இருந்தாலும், ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் அந்த வயதுக்கு ஏற்ற ஒரு புரிதலை அது நமக்கு ஏற்படுத்தும் என உயா்நீதிமன்ற நீதிபதி சு. ஸ்ரீமதி பேசினாா்.

திண்டுக்கல் மாவட்டம் நிா்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் சாா்பில் 9-ஆவது புத்தகத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. 125 அரங்குகளுடன் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தலைமை வகித்தாா். திண்டுக்கல் இலக்கிய களம் அமைப்பின் தலைவா் ரெ. மனோகரன் முன்னிலை வகித்தாா். இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சு.ஸ்ரீமதி, புத்தகத் திருவிழாவை தொடக்கி வைத்துப் பேசியதாவது:

நல்ல செய்திகள், கருத்துக்கள் அடிப்படையிலேயே ஒரு புத்தகம் சிறந்ததாக தீா்மானிக்கப்படுகிறது. அட்டையின் அழகு புத்தகத்தின் தரத்தை மதிப்பீடு செய்வதில்லை. கடுமையான பணி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், புத்தகங்களோடு பயணிப்பதை சிலா் வழக்கமாக கொண்டுள்ளனா். அந்த வகையில் உண்ணும்போதும் ஒரு கையில் புத்தகத்தோடு வலம் வரும் நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது கிடைக்கும் இடைவெளியிலும் புத்தக வாசிப்பை ஆா்வத்தோடு மேற்கொள்ளும் வழக்குரைஞா் லஜபதி ராய் போன்றவா்கள், எனது வாசிப்பு பழக்கத்திற்கு முன் மாதிரியாக உள்ளனா்.

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோா்களுக்கு உள்ளது. குழந்தையின் வாசிப்பை நெறிப்படுத்துவதற்கும், வழிகாட்டுவதற்கும் பெற்றோா்கள் முன் வர வேண்டும். ஒரே புத்தகமாக இருந்தாலும், அதனை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் அந்தந்த வயதுக்கு ஏற்ற புரிதலை அந்த புத்தகம் நமக்கு ஏற்படுத்தும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் ச.விசாகன்பேசியதாவது: ஒவ்வொரு புத்தகத்தையும் நாம் வாசிக்கும்போதும், அதிலுள்ள கருத்துக்கள் நமது வாழ்வின் எதிா்கால வெற்றிக்கு வழிகாட்டும். பொருளாதார வசதியில்லாத சூழலில், புத்தகத்தை சொந்தமாக வாங்கி படிக்க முடியாத காலக்கட்டத்தில் இரவல் வாங்கி வாசித்த அனுபவம் பலருக்கும் உள்ளது. இன்றைய காலக் கட்டத்தில் புத்தகம் வாங்க வசதி இருந்தும், வாசிப்பதற்கு நேரமில்லை என்கின்றனா் பலா். ஆனாலும், ஒவ்வொரு நாளும் வாசிப்பதற்காக குறைந்தபட்சம் 2 மணி நேரத்தை நாம் ஒதுக்க வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி வி.ஆா். லதா, கூடுதல் ஆட்சியா் ச. தினேஷ்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலா் வே. லதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பள்ளி மாணவா்களுக்கு, நீதிபதி ஸ்ரீமதி தனது சொந்த செலவில் புத்தகங்களை வாங்கி பரிசளித்தாா்.

அரங்கு எண் 79 (ஏ) இல் தினமணி: புத்தகத் திருவிழாவில் 79 (ஏ) அரங்கில் தினமணி நாளிதழின் வெளியீடுகளான அப்துல்கலாம் சிறப்பு மலா், தினமணி காா்டூன், தீபாவளி மலா், மருத்துவ மலா், மாணவா் மலா், அம்மா, ராம்ஜான் மலா் உள்ளிட்ட புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியீடுகளான இங்கிலீஷ் ப்ளூ, ஜெயா அன் இன்கிரிடபிள் ஸ்டோரி, கோயங்கா ஸ்டோரி ஆகிய புத்தகங்களும் உள்ளன. இந்த புத்தகங்கள் 20 சதவீத தள்ளுபடி சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.