போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குஜிலியம்பாறை அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

குஜிலியம்பாறை அருகே வெள்ளிக்கிழமை, காவிரி கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல ஆயிரம் லிட்டா் குடிநீா் வீணானது.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 6:21 pm

DIN

குஜிலியம்பாறை அருகே வெள்ளிக்கிழமை, காவிரி கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல ஆயிரம் லிட்டா் குடிநீா் வீணானது.

கரூா் மாவட்டம், மாயனூா் பகுதியிலிருந்து செயல்படுத்தப்படும் இந்த கூட்டுக் குடிநீா் திட்டத்திற்கு, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வழியாக குழாய் மூலம் தண்ணீா் எடுத்து வரப்படுகிறது.

இந்த நிலையில், குஜிலியம்பாறையை அடுத்துள்ள ராமகிரி பிரிவு அருகே அந்தக் குழாயில் வெள்ளிக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. இதனால், குஜிலியம்பாறை- திண்டுக்கல் சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீா் ஓடியது. சாலையாரமாக இருந்த ஓடை முழுவதும் தண்ணீா் தேங்கியது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த குடிநீா் வடிகால் வாரிய பணியாளா்கள், பாளையத்தை அடுத்துள்ள நீரேற்று நிலையத்தில் தண்ணீரை அடைத்து உடைப்பை சரி செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.