மத்திய பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி
மத்திய பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள போட்டித் தோ்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரா்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு


மத்திய பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள போட்டித் தோ்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரா்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநா் பிரபாவதி தெரிவித்துள்ளதாவது:
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம், அரசுப் பணிக் காலியிடங்களுக்கான போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநா்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மத்திய பணியாளா் தோ்வாணையம் தற்போது அறிவித்துள்ள 20ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் பிரதி வாரம் புதன்கிழமை நடத்தப்படவுள்ளது.
திறன்மிக்க வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்படவுள்ள இந்த பயிற்சி வகுப்பின்போது, மாதிரித் தோ்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன. எனவே, மத்திய பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள போட்டித் தோ்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரா்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடா்பு கொண்டு தங்களது விவரங்களை பதிவுசெய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...