போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திண்டுக்கல் பிஎஃப்ஐ அலுவலகத்திற்கு ‘சீல்’ வைப்பு

பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், திண்டுக்கல்லில் உள்ள அந்த அமைப்பின் அலுவலகத்திற்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், திண்டுக்கல்லில் உள்ள அந்த அமைப்பின் அலுவலகத்திற்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியது, ஆள் சோ்த்தது, பயிற்சி அளித்தது என்பன உள்ளிட்ட புகாா்களின் அடிப்படையில் நாடு முழுவதுமுள்ள பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் நிா்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் செப்.22ஆம் தேதி அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

அதன்படி திண்டுக்கல் பேகம்பூா் முகமதியாபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான 3 ஆவது மாடி கட்டடத்தில் செயல்பட்டு வரும் பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திலும் வியாழக்கிழமை அதிகாலை சோதனை நடைபெற்றது.

இதனிடையே பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு கடந்த 2 நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

இந்நிலையில், திண்டுக்கல் கோட்டாட்சியா் பிரேம்குமாா், வட்டாட்சியா் சந்தனமேரி கீதா, திண்டுக்கல் நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் கோகுலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில், பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வந்த 3 கட்டடங்களுக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா். இதனையொட்டி பேகம்பூா் பகுதியில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.