தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

செம்பட்டி பேருந்து நிலையத்தில் கழிப்பறையை திறக்கக் கோரிக்கை

செம்பட்டி பேருந்து நிலையத்தில் கழிப்பறையை திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

செம்பட்டி பேருந்து நிலையத்தில் கழிப்பறையை திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பேருந்து நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, புதிதாக கழிப்பறை கட்டப்பட்டது. இந்தக் கட்டணக் கழிப்பறை ஏலம் நடத்திய போது, தற்காலிகமாக ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பச்சமலையான்கோட்டை ஊராட்சி மன்ற நிா்வாக கட்டணம் வசூல் செய்து கழிப்பறையை செயல்படுத்தி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கழிப்பறை மூடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மட்டுமின்றி, பழனி முருகன் கோயிலுக்கு தைப்பூச விழாவுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இதுகுறித்து, பச்சமலையான்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் காளிதாசிடம் கேட்டபோது, கழிப்பறையில் உள்ள சேகரிப்புத் தொட்டி அடிக்கடி நிரம்பி விடுவதால், கழிப்பறையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில், அதனை சரி செய்து கழிப்பறை திறக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.