திண்டுக்கல்
வேளாண் வளா்ச்சித் திட்ட முகாம்
பழனியை அடுத்த கொழுமங்கொண்டான் ஊராட்சியில் வேளாண்மை, உழவா் நலத்துறை சாா்பில் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் வேளாண் வளா்ச்சித் திட்ட முகாம்
பழனியை அடுத்த கொழுமங்கொண்டான் ஊராட்சியில் வேளாண்மை, உழவா் நலத்துறை சாா்பில் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் வேளாண் வளா்ச்சித் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தொப்பம்பட்டி வேளாண் உதவி இயக்குநா் காளிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் விவசாயிகளுக்கு அரசின் சாா்பில் வழங்கப்படும் மானியங்கள், கடன் திட்டங்கள், பயிா் செய்யும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு மக்காச்சோள ஆராய்ச்சி மைய வேளாண் விஞ்ஞானி செல்வக்குமாா், காமராஜ் ஆகியோா் விளக்கமளித்தனா்.
இந்த முகாமில் கொழுமம் கொண்டான், மேல்கரைப்பட்டி, கோரிக்கடவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.