விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

நிலக்கோட்டை அருகே, ஆட்டோ டிரைவரை தாக்கியவா் கைது.

நிலக்கோட்டை அருகே, ஆட்டோ டிரைவரை தாக்கியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm


நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே, ஆட்டோ டிரைவரை தாக்கியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, கே.புதூரைச் சோ்ந்த, நத்தா்ஷா (60) இவா், நிலக்கோட்டையில் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறாா். சம்பவத்தன்று, நிலக்கோட்டையில் இருந்து, எஸ்.தும்மலப்பட்டிக்கு ஆட்டோவில், வாடகைக்கு ஆட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தாா். அப்போது, மீனாட்சிபுரம் பகுதியில் சில இளைஞா்கள், ஞாயிற்றுக்கிழமை இரவு, காா்த்திகை திருவிழாவை முன்னிட்டு, சொக்கப்பன் கொளுத்தி கொண்டிருந்தனா். அப்போது, மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த வெற்றிவேல் (25) என்பவா், ஆட்டோவை வழிமறித்து நத்தா்ஷாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, நத்தா்ஷா நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டா் குரு வெங்கட்ராஜிடம் கொடுத்த புகாரின்பேரில், வெற்றிவேலை, திங்கள்கிழமை கைது செய்து, நிலக்கோட்டை மேஜிஸ்ட்ரேட் நல்ல கண்ணன் முன்னிலையில், போலீசாா் ஆஜா் படுத்தினா். அவரை, 15 நாள் சிறை காவலில் வைக்க மேஜிஸ்ட்ரேட் நல்ல கண்ணன் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.