முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

ஆறுகால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி

ஆறுகால்களுடன் பிறந்த கன்றுக்குட்டி

Updated On :10 ஏப்ரல் 2024, 12:07 am

பழனி: பழனி அருகேயுள்ள தும்பலப்பட்டியில் 6 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை பொதுமக்கள் பாா்த்து சென்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள தும்பலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல். இவா் வளா்த்த பசுமாடு ஒன்று செவ்வாய்க்கிழமை ஆறு கால்களுடன் கன்றுக்குட்டியை ஈன்றது. செவலை நிறத்திலான கன்றுக்குட்டியின் முதுகு பக்கத்தில் இரண்டு கால்கள் இருந்தன. இந்த அதிசய கன்றுக் குட்டியை கிராம பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டு சென்றனா்.

இதுகுறித்து கால்நடை உதவி இயக்குநா் சுரேஷ் கூறுகையில், ஆயிரத்தில் ஒரு பசுமாடு மரபணு குறைபாடு காரணமாக இதுபோல குட்டிகளை ஈனுவது வழக்கம் என்றாா் அவா்.