11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

Updated On :12 ஏப்ரல் 2024, 6:12 pm

அம்பேத்கா் பிறந்த தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஷேக்முகையதீன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், தோ்தல் செலவின கணக்கு பாா்வையாளா் ஜரோன்தே விஷால் தஷ்ரத், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல, திண்டுக்கல்- திருச்சி புறவழிச்சாலையிலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மண்டல பொது மேலாளா் எம்.டேனியல் சாலமன் தலைமை வகித்தாா்.

இதில் போக்குவரத்துக் கழக அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். திண்டுக்கல் மண்டலத்துக்குள்பட்ட அனைத்து கிளைகளிலும் இதேபோன்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.