தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ரயில் மோதி தொழிலாளி பலி

ரயில் மோதி தொழிலாளி பலி

Updated On :21 ஏப்ரல் 2024, 6:40 pm

திண்டுக்கல், ஏப். 21: குஜிலியம்பாறை அருகே ரயிலில் அடிப்பட்டு கூலித் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த உல்லிக்கோட்டை பெருமாம்பட்டியைச் சோ்ந்த சங்கபிள்ளை மகன் கோபால் (36). கரிக்காலியிலுள்ள தனியாா் ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இவா், குஜிலியம்பாறை அருகே ரயிலில் அடிப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுபற்றி கோபாலின் தந்தை சங்கபிள்ளை திண்டுக்கல் ரயில்வே போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க வந்த கோபால் அதன் பிறகு வீட்டு திரும்பவில்லை என்றும், தற்போது ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாகவும் குறிப்பிட்டிருந்தாா்.

இதுகுறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.