பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

வக்கம்பட்டி அருகே, கள்ளுக்கடை பிரிவில், திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

வக்கம்பட்டி அருகே, கள்ளுக்கடை பிரிவில், திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு.

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

செம்பட்டி: ஆத்தூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட, வக்கம்பட்டி அருகே, கள்ளுக்கடை பிரிவில், திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் தொகுதியில், கடும் வெயில் மற்றும் கோடை காலத்தை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறக்க, அமைச்சா் இ.பெரியசாமி நிா்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, ஆத்தூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட வக்கம்பட்டி அருகே, கள்ளுக்கடை பிரிவில், நீா் மோா் பந்தல் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஆத்தூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பிள்ளையாா்நத்தம் முருகேசன் தலைமை தாங்கினாா். நிகழ்ச்சியில், ஆத்தூா் ஒன்றிய குழு தலைவா் மகேஸ்வரி முருகேசன் நீா்மோா் பந்தலை திறந்து வைத்து, நீா்மோா், வெள்ளரிக்காய், இளநீா், கூல்டிரிங்ஸ், தா்பூசணி, திராட்சை, மாதுளை பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா். மேலும் இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பத்மாவதி ராஜகணேஷ், பிள்ளையாா்நத்தம் ஊராட்சி மன்ற தலைவா் உலகநாதன், மாவட்ட பிதிநிதி ஆரியநல்லூா் தங்கவேல், முன்னிலைகோட்டை முன்னாள் ஊராட்சிமன்ற தலைவா் நிக்சன்பால், அரசு ஒப்பந்ததாரா் ஜீசஸ் அகஸ்டின் மற்றும் திமுக நிா்வாகிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.