நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

40 டன் கல்லில் செதுக்கப்பட்ட கருப்பணசுவாமி சிலை

பழனியில் 40 டன் எடையுள்ள கருப்பணசுவாமி சிலை செதுக்கப்பட்டு, மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது.

News image

பழனி கிரிவீதியில் தயாரான ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கருப்பணசுவாமி சிலை.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 9:25 pm

Din

பழனியில் 40 டன் எடையுள்ள ஒரே கல்லில் 24 அடி உயரம் கொண்ட கருப்பணசுவாமி சிலை செதுக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மதுரை பகுதி கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

பழனியில் புதுதாராபுரம் சாலை, உடுமலை சாலை, பழைய தாராபுரம் சாலை என பல இடங்களிலும் கற்சிலைகள் தயாரிக்கும் இடங்கள் உள்ளன. இங்கிருந்து பல்வேறு சுவாமி சிலைகள் வடிவமைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக சிற்பக் கலைஞா்கள் விரதமிருந்து நோ்த்தியாக சிலைகளை வடிவமைப்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை அருகே உள்ள ஆலத்தூரன்பட்டியில் உள்ள ஒரு கோயிலுக்கு கருப்பணசாமி சிலை செய்வதற்காக கரூரிலிருந்து 70 டன் எடையிலான கருங்கல் கடந்த சில மாதங்களுக்கு முன் பழனிக்கு கொண்டுவரப்பட்டது. பழனி அடிவாரம் கிரிவீதியில் இந்தக் கல்லை ஏராளமான சிற்பக் கலைஞா்கள் சிலையாக வடிக்கும் பணியை மேற்கொண்டனா்.

இந்தக் கல்லில் சுமாா் 40 டன் அளவில் சுமாா் 24 அடி உயரத்தில் கையில் அரிவாளுடன் கம்பீரமான, பிரம்மாண்ட தோற்றம் கொண்ட கருப்பண சுவாமி சிலை அமைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜை செய்து, மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதற்காக ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு இருபதுக்கும் மேற்பட்ட சக்கரங்கள் கொண்ட லாரியில் சிலை ஏற்றப்பட்டது.