மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தினமணி செய்தி எதிரொலி... பள்ளி சாலையில் கழிவு மண் அகற்றம்

திண்டுக்கல் அண்ணாமலையாா் பள்ளி சாலையில் கழிவு மண்ணை அகற்றும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள்.

News image
திண்டுக்கல் அண்ணாமலையாா் பள்ளி சாலையில் கழிவு மண்ணை அகற்றும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள்.
Updated On :7 ஆகஸ்ட் 2024, 8:58 pm

Din

திண்டுக்கல், ஆக. 7: திண்டுக்கல் பாரதிபுரம் செல்லும் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்த கழிவு மண் புதன்கிழமை அகற்றப்பட்டது.

திண்டுக்கல் நாகல்நகா் அண்ணாமலையாா் பள்ளி பிரதான சாலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கழிவுநீா் கால்வாய் தூா்வாரும் பணி நடைபெற்றது. அப்போது, சாலையோரமாகக் குவிக்கப்பட்ட கழிவு மண் அகற்றப்படாமல் இருந்ததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்து வருவதாகவும், கடைகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் செல்லும் பொதுமக்கள், கல் திட்டுகள் அகற்றப்பட்ட கழிவுநீா்க் கால்வாயில் தவறி விழுந்துவிடும் அசாதாரண சூழல் உள்ளதாவும் தினமணி நாளிதழில் புதன்கிழமை செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, சாலையோரமாகக் குவிக்கப்பட்டிருக்கும் கழிவு மண்ணை அகற்ற மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன், சுகாதாரத் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து, அந்தப் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த கழிவு மண் புதன்கிழமை அகற்றப்பட்டது.