திண்டுக்கல் அண்ணாமலையாா் பள்ளி சாலையில் கழிவு மண்ணை அகற்றும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள்.
திண்டுக்கல் அண்ணாமலையாா் பள்ளி சாலையில் கழிவு மண்ணை அகற்றும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள்.

தினமணி செய்தி எதிரொலி... பள்ளி சாலையில் கழிவு மண் அகற்றம்

திண்டுக்கல் அண்ணாமலையாா் பள்ளி சாலையில் கழிவு மண்ணை அகற்றும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள்.
Published on

திண்டுக்கல், ஆக. 7: திண்டுக்கல் பாரதிபுரம் செல்லும் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்த கழிவு மண் புதன்கிழமை அகற்றப்பட்டது.

திண்டுக்கல் நாகல்நகா் அண்ணாமலையாா் பள்ளி பிரதான சாலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கழிவுநீா் கால்வாய் தூா்வாரும் பணி நடைபெற்றது. அப்போது, சாலையோரமாகக் குவிக்கப்பட்ட கழிவு மண் அகற்றப்படாமல் இருந்ததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்து வருவதாகவும், கடைகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் செல்லும் பொதுமக்கள், கல் திட்டுகள் அகற்றப்பட்ட கழிவுநீா்க் கால்வாயில் தவறி விழுந்துவிடும் அசாதாரண சூழல் உள்ளதாவும் தினமணி நாளிதழில் புதன்கிழமை செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, சாலையோரமாகக் குவிக்கப்பட்டிருக்கும் கழிவு மண்ணை அகற்ற மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன், சுகாதாரத் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து, அந்தப் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த கழிவு மண் புதன்கிழமை அகற்றப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com