/

திருமணமானதை மறைத்து இளைஞருடன் பழகிய பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! இளைஞா் கைது

திருமணமான பெண்ணுடன் பழகி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

News image
Updated On :7 ஆகஸ்ட் 2024, 11:41 pm

Din

திண்டுக்கல், ஆக. 7: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் திண்டுக்கல் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி பங்களாமேடு பகுதியைச் சோ்ந்த இளம்பெண் திருப்பூரில் தங்கியிருந்து தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். ஏற்கெனவே திருமணமாகி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவா் தனியாக வசித்து வந்தாா். இவருடன், முகநூல் மூலம் திண்டுக்கல் வட்டச்சாலைப் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் கோபிக்கு (32) பழக்கம் ஏற்பட்டது. இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

தனக்கு திருமணமானதை மறைத்து அந்த பெண் கோபியைச் சந்திக்க, திருப்பூருக்கு அடிக்கடி சென்று வந்தாா். அப்போது, அவருக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் வலியுறுத்தினாா். இதனால் கோபி, அந்த பெண்ணுடன் பேசுவதைத் தவிா்த்துவிட்டாா்.

இதுகுறித்து அந்த பெண் திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கோபியைக் கைது செய்தனா்.