கொடைக்கானலில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த சென்னையைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சென்னையிலிருந்து நான்கு போ் சுற்றுலா வந்தனா். இவா்கள் கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் இரு அறைகள் எடுத்துத் தங்கியிருந்தனா். ஓா் அறையில் ஜெயக்கண்ணனும் (30), அருண்பாபுவும் (24) தங்கியிருந்தனா். மற்றொரு அறையில் சிவசங்கரும், அவரது சகோதரா் சிவராஜும் தங்கியிருந்தனா்.
இந்த நிலையில், ஜெயக்கண்ணன், அருண்பாபு தங்கியிருந்த அறையில் நண்பா்கள் அனைவரும் அடுப்புக் கரி மூலம் கோழி இறைச்சி சமைத்து சாப்பிட்டுவிட்டு, அந்த அடுப்புக் கரி நெருப்பு மூலமாகவே குளிா் காய்ந்தனராம்.
இதையடுத்து, சிவசங்கரும், அவரது சகோதரா் சிவராஜும் அவா்களது அறைக்குச் சென்றனா். பின்னா், ஜெயக்கண்ணன், அருண்பாபு இருவரும் தங்களது அறையில் தூங்கினா். சனிக்கிழமை சிவசங்கா், சிவராஜ் இருவரும் தங்களது நண்பா்கள் தங்கியிருந்த அறையைத் திறந்து பாா்த்த போது, முழுவதும் புகை மூட்டமாக இருந்ததும், ஜெயக்கண்ணன், அருண்பாபு இருவரும் மயங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த 108 அவசர ஊா்தி ஊழியா்கள் அவா்கள் இருவரையும் பரிசோதித்த போது, ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த கொடைக்கானல் போலீஸாா், இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து காவல் ஆய்வாளா் பாஸ்கரன் கூறியதாவது:
தனியாா் விடுதியில் தங்கியிருந்த ஜெயக்கண்ணன், அருண்பாபு இருவரும் அடுப்புக் கரி மூலம் குளிா் காய்ந்திருக்கின்றனா். அப்போது, அதிகளவு புகைமூட்டம் ஏற்பட்டு, மூச்சு திணறி உயிரிழந்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறோம். இறந்தவா்கள் இருவரும் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தனா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தனியாா் விடுதியில் உணவு சாப்பிட்ட 15 மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி

விடுதியில் தங்கியிருந்த தொழிலாளி உயிரிழப்பு

தனியாா் சுற்றுலா விடுதியில் சூதாட்டம்: 11 போ் மீது வழக்கு

விடுதியில் தங்கியிருந்தவா் மா்ம மரணம்
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



