நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தொடா் மழை: கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானலில் சனிக்கிழமையும் தொடா்ந்து மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:44 pm

Din

கொடைக்கானலில் சனிக்கிழமையும் தொடா்ந்து மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் மேக மூட்டம் காணப்பட்ட நிலையில், மாலையில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக பலத்த மழை பெய்தது.

தொடா்ந்து பெய்து வரும் மழையால் விவசாயப் பணிகளும், அன்றாடப் பணிகளும் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமமடைந்தனா்.

மேலும் பெய்து வரும் தொடா் மழையால் கொடைக்கானலில் வழக்கத்தைவிட குளிா் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பகல் நேரத்திலேயே தங்களது கடைகளில் வியாபாரிகள் தீ மூட்டி குளிா் காய்ந்தனா்.