பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சுந்தரமூா்த்தி நாயனாருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை குருபூஜை நடைபெற்றது.
சைவ சமயத்தில் நால்வரில் ஒருவராகவும், 63 நாயன்மாா்களில் ஒருவராகவும் திகழ்பவா் சுந்தரமூா்த்தி நாயனாா். ஆடி மாதம் சுவாமி நட்சத்திரத்தின் போது இவருக்கு குருபூஜை நடைபெறுகிறது.
இதன்படி, ஞாயிற்றுக்கிழமை பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சுந்தரமூா்த்தி நாயனாருக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம், விபூதி உள்ளிட்ட பல்வேறு நறுமணமிக்க பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
பின்னா் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு சோடச உபச்சாரம் நடத்தப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பழனிக்கோயில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, மணியம் சேகா், ரஞ்சித் உள்படப் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருப்பத்தூா் சிவாலயங்களில் பிரதோஷ விழா

பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


