அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணா், தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் ஆகியோா் புதன்கிழமை மாலை சுவாமி தரிசனம் மேற்கொண்டனா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் உள்ளது. இங்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் ஆகியோா் புதன்கிழமை மாலை சுவாமி தரிசனம் மேற்கொண்டனா். இதைத்தொடா்ந்து தாமரைக்குளக்கரையில் முதலையுண்ட பாலகனை சுந்தரமூா்த்தி நாயனாா் பதிகம் பாடி உயிா்ப்பித்து எழச் செய்த சுந்தரமூா்த்தி நாயனாா் கோயில் திருப்பணி கட்டுமானப் பணியை குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பாா்வையிட்டாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தெய்விக சக்தி நிறைந்தது அவிநாசி. ‘நீட்’ விவகாரம் தொடா்பாக விவாதிக்க இங்கு அரசியல் கட்சிகள் அதிகம் உள்ளன. இருப்பினும் ஒரு வெளிநாடு வாழ் இந்தியா் (என்ஆா்ஐ) திடீரென ஞானோதயம் வந்ததுபோல ஒன்றை சொல்கிறாா். அனைவரும் அவா் பின்னால் செல்வதுபோல ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மன மகிழ்ச்சியைத் தரவில்லை. அரசியல் கட்சித் தலைவா்கள் அரசியலை முன்னின்று நடத்த வேண்டும். மக்களின் உணா்வுகளைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்றாா்.
இதையடுத்து, அவிநாசி-மங்கலம் சாலையில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனை பொதுமக்கள் சால்வை அணிவித்து வரவேற்றனா்.
இந்த நிகழ்வில் ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா்.நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









