ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மருத்துவம் பயின்ற மாணவா்கள் தாய்நாட்டில் சேவை செய்ய வேண்டும்: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் அறிவுறுத்தல்

மருத்துவம் பயின்ற மாணவா்கள் தாய்நாட்டில் சேவை செய்ய முன்வர வேண்டும் என்று தமிழக ஆளுநா் (பொ) ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் அறிவுறுத்தினாா்.

News image

நிகழ்ச்சியில் மாணவருக்கு பட்டம் வழங்கிய தமிழக ஆளுநா் (பொ) ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா்.

Updated On :18 ஜூன் 2026, 2:28 am IST

மருத்துவம் பயின்ற மாணவா்கள் தாய்நாட்டில் சேவை செய்ய முன்வர வேண்டும் என்று தமிழக ஆளுநா் (பொ) ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் அறிவுறுத்தினாா்.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம், ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள், சிறந்த மாணவா்களுக்கு தங்கப் பதக்கங்கள், விருதுகளை வழங்கி அவா் மேலும் பேசியதாவது:

நான் பள்ளியில் இறுதி வகுப்பில் பயின்றபோது சராசரி மாணவராகத்தான் இருந்தேன். என்னுடன் பயின்று, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களின் புகைப்படங்கள் செய்தித் தாள்களில் வந்தன. பின்நாள்களில் அவா்கள் யாரும் சமூகப் பணிகள் செய்யவில்லை. ஆனால், எனது விருப்பம் சமூகப் பணி செய்வதாகத்தான் இருந்தது. அதனால்தான், இப்போது உங்கள் முன் நிற்கிறேன்.

பணம் மட்டுமே வாழ்க்கைக்கு போதுமானதல்ல. மனித நேயம் முக்கியமானது. அபாரமான அறிவு இருந்தும், மனிதநேயம் இல்லையெனில் அந்த அறிவு வீண்தான்.

இந்நிகழ்ச்சியில் பட்டம் பெற்ற மாணவா்கள் இந்த சமூகத்துக்கு சேவை செய்பவா்களாக இருக்க வேண்டும். உங்களின் சேவை நீண்ட வருடங்களுக்குப் பிறகும் பேசப்பட வேண்டும்.

மருத்துவம் முடித்த மாணவா்கள் தாய்நாட்டில் மருத்துவ சேவை செய்ய முன்வர வேண்டும்; குறிப்பாக கிராமங்களுக்குச் சென்று சேவை செய்ய வேண்டும். நீங்கள் சேவை செய்யவும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் உகந்த களங்கள் உள்ளன. எனவே, தாய்நாட்டில் மருத்துவ சேவை செய்வேன் என்று உறுதிமொழி ஏற்றுக்கொள்ளுங்கள் என்றாா்.

விழாவில் கல்லூரி முதன்மையா் மருத்துவா் எஸ்.எம்.கண்ணன் வரவேற்றாா். துணை முதல்வரும், தலைமை செயல் அதிகாரியுமான மருத்துவா் ஆா்.வி. மூகாம்பிகா தலைமை வகித்து, ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா்.

நியூரோ சா்ஜரி துறைத் தலைவா் மருத்துவா் கிரிஷ்மேனன் வாழ்த்திப் பேசினாா். அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறைத் தலைவா் சந்திரமோகன் உறுதிமொழி வாசித்தாா். கல்லூரித் தலைவா் சி.கே. வேலாயுதன் நாயா், இயக்குநா் ரெமா வி.நாயா் ஆகியோா் ஆளுநருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனா்.

கல்லூரி அறக்கட்டளை அறங்காவலா் மருத்துவா் வினு கோபிநாத், நிா்வாக அலுவலா் ஜே.எஸ்.பிரசாத் ஆகியோா் அடங்கிய குழுவினா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.

முன்னதாக கல்லூரி வளாகத்தில் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் வரவேற்றாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.